Saturday, February 17, 2018

கலாட்டா கல்யாணம் 2


recap: சசி ATM ல் சுகன்யாவைப் பார்த்தான். கண்டதும் காதல். கனவுகளோடு பலவோடு கதவு திறக்கையில் எதிர்வீட்டில் ...

x-x-x-x-x

எதிர்வீட்டுக்கு சுகன்யா குடிவருவதைப் பார்த்ததும், சசியின் மனதிற்குள் பத்து கதவுகள் ஒன்றன் பின் ஒன்றாய்த் திறந்து கடைசியில் சுகன்யா நின்று இவனைப் பார்த்துச் சிரித்து வெட்கிப்பது போல... அதே தாங்க ... பாரதிராஜா படத்துல ... தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் ... அந்த எபெக்ட்;

'ஹலோவ்' சசி பேசத்தொடங்கினான்.

'ஹலோ’

‘புதுசா குடிவந்திருக்கீங்களா ?'

'ஆமா இன்னிலேர்ந்து'

'ஞாபகமிருக்கா ?'

'நல்லா ஞாபகமிருக்கு, இந்த வீடுதான்'

'அட அதில்லேங்க, நேத்து ATM ல பார்த்தோமே .... சசி'

'இல்லே சுகன்யா ... சுகன் ன்னு கூப்பிடுவாங்க'

'என்னோட பேரு சசிங்க ... சுருக்கமா சசீந்திரன்னு கூப்பிடுவாங்க'

'யு மீன் .... பேரு சசீந்திரன் ... சசி ன்னு கூப்பிடுவாங்க'

'அதானே நான் சொன்னே, இல்லியா?'

'நைஸ் மீட்டிங்'

'இருங்க நான் காஃபி போட்டுக் கொண்டுவர்ரேன், ஒன் நிமிட்'

'தேங்க்ஸ் ... நான் இப்போதா குடிச்சிட்டு வந்தேன், பத்து நிமிசத்துல ஆபிசுக்குக் கெளம்பணும், அப்புறம் பார்ப்போம்'

'எங்கே போகணும்?'

'தரமணி'

'நானும் ...' சசி முடிப்பதற்குள் சுகன்யா உள்ளே சென்றிருந்தாள்;

அய்யய்யோ நெஞ்சு கெறங்குதடி
ஆகாயம் இப்போ வலையுதடி

அவன் நெஞ்சத்து எண்ணங்களை உள்வாங்கி ரேடியோ பாடத்தொடங்கியது.

---------

இப்படியாக இருவரும் ... ஒரே இடத்தில் எதிர் எதிர் வீட்டில் வசித்து ... ஒரே இடத்தில் தரமணியில் வேறு வேறு கம்பெனியில் பணி புரிந்து ... தம் தமது வண்டியில் ஒன்றாய்ச் சென்று ..... முடிந்தவரை ஒன்றாய்த் திரும்பி வந்தனர்;

அடுத்தென்ன ... காதல் தான்.

'சுகன் ... ஒருகவிதை'

'சொல்லேன்'

     'அலையாய் நான் படகாய் நீ 
     ஆடித்திரிவோமா ?
     மழையாய் நான் முகிலாய் நீ 
     கொட்டித் தீர்ப்போமா ?
     குரலாய் நான் குயிலாய் நீ 
     பாடிப் பறப்போமா ?
     உடையாய் நான் இடையாய் நீ 
     ஒட்டிக்கிடப்போமா ?
     விதையாய் நான் நிலமாய் நீ 
     செடியாய் முளைப்போமா ?
     கவியாய் நான் தமிழாய் நீ 
     கவிதை புனைவோமா ?
     கண்ணன் நான் ராதை நீ 
     காதல் செய்வோமா ?'

'லவ்லி, சசி, ஐ லவ் யு'

'ஐ டூ ... சுகன்'

'அடுத்து ?'

'கல்யாணம் பண்ணிப்போமா ?'

'இன்னும் கொஞ்சம் காதலிப்போமே சசி'

'தனித்தனியா இருக்கணும், ரெண்டு பேரும் வாடகை தரணும், வேஸ்ட் இல்லியா?'

'அடப்பாவி, அப்போ வாடகை மிச்சப்படுத்தத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா?'

'அப்டி ஏன் யோசிக்கறே நீ, இப்போ ஒரு வீடு வெக்கேட் பண்ணிட்டா வேற யாராவது வாடகைக்கு வரலாம், அப்டி வர்றவங்களுக்காக யாராச்சும் காத்திருக்கலாம் ... அவங்களும் காதலர்களா மாறலாம் … இப்டி என்னென்னவோ நடக்கலா … இல்லியா ?'

'சரி ஒங்க வீட்டுல காதலுக்கு ஒத்துப்பாங்களா?'

'ஒதப்பாங்க, சமாளிப்போ, ஒங்க வீட்டுல ?'

'பிரச்சனை இருக்காது சசி, எப்டி சமாளிக்கப்போறே ஒங்க வீட்டுல?'

'தெரிஞ்ச ஒரு சார், யோகி இருக்காரு ஆபிஸ்ல, அவர்ட்ட ஐடியா கேக்குறே, ஏதாச்சும் சொல்லுவாரு'

'ஓகே, பேசிட்டுச் சொல்லு, போலாமா ? ஓலா புக் பண்ணே ?'

'நடந்துப் போவோமே, ஈவினிங் வாக் ஈஸ் குட் பார் ஹெல்த்'

'டேய், நான் பணம் தரேன், வாப்பா'

'ஆட்டோ ரெடியா இருக்கே, போலாமா? '

'டின்னர் வாங்கித்தறியா? ஆட்டோல போகலாம்'

'இதோ ஓலா புக் பண்றே'

'நாயி, கல்யாணம் ஆகட்டும், ஒன்னைப் பாத்துக்குறேன்'

'ஹிஹிஹி'

[ கல்யாணம் ... இன்னும் முடியலை ]

No comments:

Post a Comment