Tuesday, October 25, 2016

நான் … நீ



அலையாய் நான் படகாய் நீ
ஆடித்திரிவோமா ?

மழையாய் நான் முகிலாய் நீ
கொட்டித் தீர்ப்போமா ?

குரலாய் நான் குயிலாய் நீ
பாடிப் பறப்போமா ?

உடையாய் நான் இடையாய் நீ
ஒட்டிக்கிடப்போமா ?

விதையாய் நான் நிலமாய் நீ
செடியாய் முளைப்போமா ?

கண்ணன் நான் ராதை நீ
காதல் செய்வோமா ?

கவியாய் நான் தமிழாய் நீ
கவிதை புனைவோமா ?

2 comments: