Tuesday, September 20, 2016

ஆமென்



காலை வேளையில்
கைகளை நன்றாய் வீசி
நடைப்பயிற்சி செய்வோரைப் பார்க்கும்போதெல்லாம்
*
ஒரு ஓரமாய் அமர்ந்து
தன் இஷ்டம்போல்
யோகாசனம் செய்து சுகிப்போரைப் பார்க்கும்போதெல்லாம்
*
மிதிவண்டியில் இங்குமங்கும்
மின்னல் போல் பயணித்து
மகிழ்வோரைப் பார்க்கும்போதெல்லாம்
*
நாலு ஐந்து மாடியாயினும்
சளைக்காமல் சரசரவென்று
ஏறி இறங்குவோரைப் பார்க்கும்போதெல்லாம்

கோபம் கோபமாய் வருகிறது.
*
பசித்தப்புலி இவர்களையும்
புசிக்கட்டும் என்று
சாபமிடத் தோன்றுகிறது.
*
வாழ்வை நீட்டிக்கவும்
வாழ்கையில் நலமாய் வாழவும்
இவர்கள் செய்யும் இச் சேட்டைகள்
விசித்திரமாய் இருக்கிறது.
*
அதேசமயம் 
என்னைச் சேர்ந்த
எவரும் இவ்வாறெல்லாம் செய்வதில்லை
என்பதை அறிந்து
மனம் அமைதிக்கொள்கிறது
*
ஆமென்.

3 comments:

  1. அடேயப்பா. இவ்ளோ லேசினெஸா :)

    ReplyDelete
    Replies
    1. சும்மா இருக்கறது சாதாரண விடயம் இல்லே, மேடம்.

      Delete