Thursday, August 7, 2014

நீ



கண் விழித்தால் அருகில் நீ;
'கண்ணா இங்கெப்படிடா வந்தாய் நீ'
என்றுகேட்டால்
அறைத்தோழி முறைக்கிறாள்;
'அட ராமா' என்று சொல்லிக்கொண்டே
குளியலறைக்குள் சென்றால்
அரையில் ஆடையோடு அங்கே நீ;
ஆடை அணிகையில்
இடையிலிருந்து கை எடுக்காது
இம்சிக்கிறாய் நீ;
உணவருந்த உட்கார்ந்தால்
ஒரு கவளம் கேட்கிறாய் நீ;
ஆண்டவனே துணை என்று
ஆலயம் தொழ சென்றால்
ஆடவன் நீ
அருகில் தொடுதூரத்தில்;
ம் ... வேறென்ன செய்ய
‘மாரியாத்தா காளியாத்தா
என்னையும் சீக்கிரம்
ஆத்தா ஆக்கு‘
என்று வேண்டிக் கொண்டு
வெளியே வந்தால்,
நாலு சக்கர வண்டியில்
எதிரில் நீ.

No comments:

Post a Comment