Sunday, September 29, 2013

பரவால்லே ...

எட்டாம்பு படிக்கும் போது
எனக்கெட்டா சுவத்துல
எக்கி எக்கி ஒன்னப் பாத்த
என்னைப் பாத்து சிரிச்சே,

மறந்திருப்பே பரவால்லே;

பத்தாவது பரீட்சை
பாத்து எழுது, யாரையு
பாக்காம எழுதுன்னு ரைமிங்கா பேசுனே,

அத விடு;

பதினொன்னு இந்தப்
பள்ளின்னு சேதி சொல்லி அனுப்புனே,
இப்போ இல்லேன்னு சொல்லுவே,

பரவால்லே புள்ளே;

பன்னண்டாவது
பரீட்சைக்கு முன்னே நம்ப
பட்டாளமே படத்துக்குப் போனோ, அப்போ
எம்பக்கம் வந்து உக்காந்தே,
என் கைய எடுத்து
உன் கை மேல வெச்சிக்கிட்டே,
தெரியாம நீ வெச்சிருப்பென்னு
சும்மா இருந்திருப்பேன்னு இப்போ சொல்லுவே,

பரவால்லே, விட்டுத் தள்ளு;

ஒங்கக்கா கல்யாணத்துக்கு வந்த என்னை
கவனி கவனின்னு கவனிச்சே,
கல்யானத்துக் வந்தவங்கள அப்படித்தா கவனிக்கனும்னு
இப்போ சொல்லுவே,

பரவால்லே;

வேலை விசயமா
வெளியூரு போறேன்னு சொன்னப்போ,
கண்ணு கலங்க ‘எப்போ வருவே’ன்னு கேட்டே,
வெங்காயம் நறுக்குனே, கண்ணுல தண்ணின்னு இப்போ
வெட்டி விளக்கம் சொல்லுவே,

இட்ஸ் ஓகே;

உன் கல்யாணப் பத்திரிகை
ஊருக்கெல்லா குடுக்குப்போது
எனக்கு குடுத்திருக்கலாமே,
தனியா சந்திச்சி
தர்றது ஏன்னு மட்டு சொல்லிட்டு
தாலி கட்டிக்கோ, யாருக்கு வேன்னாலு
தாரமாகி நின்னுக்கோ.

Monday, September 23, 2013

ஆடை

சிவப்பாடை அணிந்து வந்து எனைச்
சித்ரவதை செய்கிறாள்;

பச்சை ஆடையில் பாவை எனைப்
பார்த்து பரிகசிக்கிறாள்;

நீல நிறத்தில் என் முன் நின்று தன்
நயனங்களால் நலம் கேட்கிறாள்;

கருப்பாடை கன்னியின்
கவர்ச்சியைக் கூட்டுகிறது;

வெள்ளை நிறத்தில் தேவதை ஒன்று
விழியின் முன்னே மிதக்கிறதே;

ஆடை ...
அணிந்தாலும் அவஸ்தை,
அணியாது நின்றாலும் அவஸ்தை;