Thursday, March 7, 2013

Happy International women's day


................
ஆமா புஷ் ன்னா புல் லுவோ
புல் லுனா புஷ் சுவோ
................
சாவி  போடாம வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோ
நீங்க டெக்னாலஜி யா இம்ப்ருவ் பண்ணணு சார்
................
அவசரம் டிவி ஆன் பண்ணாம ரிமோட் வொர்க் பண்ணலேன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவோ
நீங்க  டிவி ஆன் பண்ணிட்டு போங்கப்பா
................
எங்களுக்கு புடிச்ச ட்ரெஸ் போட்டுக்கக் கூட எங்களுக்கு சுதந்திரம் இல்லியா,
பின்ன காந்தி எதுக்கு பாதி ஆடை உடுத்திப் பாடுபடனு, சொல்லுங்க
................
தேவைன்னு வாங்குவோ, தேவையில்லாம போகும், என்ன பண்றது ?
ஒங்கள நாங்க தள்ளியா வெச்சிட்டோ ?
................
பேச வைக்கறீங்க சார் பேச வைக்கறீங்க
எங்க உரிமைய நிலை நாட்ட நாங்க கத்த வேண்டியதிருக்கு,
கதற வேண்டியதிருக்கு, கண்ணீர் விட்டு அழ வேண்டியதிருக்கு ....
OK OK madam, Happy International women's day
Thank you;

Wednesday, March 6, 2013

காத்திருக்கே, தனிமையில கெடக்கே





திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனிய
இதுவரைக்கு வரலே ஏன்னு தெரியலே,
நாளைக்கு வரலா இல்லே அடுத்த வாரம் வராலான்னு - இன்னு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.

தபால்காரரு வாராரு போறாரு
தகவல் ஏது சொல்லாம தப்பிக்கராரு
மணியக்காரரு தவறாம நலம் விசாரிக்கராரு
அடிக்கடி பட்டணம் போறாரு
ஆனா ஒன்னப்பத்தி மட்டு பேச மாட்டேங்கறாரு.

கோவில் பூசாரி -
நெலத்த கோவிலுக்குக் குடு ஒ
நெலம மாறு
கவல தீரும்னு சொன்னாரு,
எனக்கு ஒன்னு தெரிலே - அவரு
பொண்ணுக்கு கண்ணாலம் ஆச்சி அசலூருல.

ஆத்துல தண்ணி இல்லே என்
அழுகை ஓயலே;
வாழ்க்கைல நீஞ்சுரே நீஞ்சுரே
கரை எங்கே தெரியலே;
காதலிச்ச ஒனக்கு என்னை
கட்டி வாழத் தெரியலே
பூத்து நின்ன எனக்கு
காதல்னா என்னன்னு புரியலே.

கூட இருந்த கிளி,
ஜோடி ஒன்னு சேத்துக்கிச்சி,
தனியா இருக்கு என்னைப் பாத்து
சவுக்கியமான்னு கேட்டு சிருச்சிகிச்சி;
என் வேதனை அதுக்குப் புரியலே,
நீ தரும் சோதனை எனக்குப் புரியலே;

சட்டுபுட்டுன்னு வந்தா
சடங்கான பொண்ணு
சம்சாரமாவா, இல்லே
சங்கருத்துக்கிட்டு
சாமியாவா, நல்ல
சேதி சொல்லு
நம்பி நா காத்திருக்கே,
தனிமையில கெடக்கே.