Monday, December 31, 2012

வாழ்க புத்தாண்டு !


புது வருடம் பிறக்கட்டும் 
புத்தம் புதிய நாட்கள் இனி வரட்டும் 
நேர்மையாய் இருப்போர் நலமாய் வாழட்டும் 
இதுவரை இருந்த வில்லங்கங்கள் விலகட்டும் 
இனியாவது ஏழ்மை இல்லாதிருக்கட்டும் 
பசிக்கு உணவு கிட்டட்டும் 
பதுக்கல் இல்லாது பொருட்கள் கிடைக்கட்டும் 

கனவுகள் யாவும் பலிக்கட்டும் 
தீயோர் திருந்தட்டும் 
மனிதம் அமைதியாய் மண்ணுலகில் மகிழ்ந்திருக்கட்டும் 

கடவுள் துணை இருக்கட்டும் 

வாழ்க புத்தாண்டு !

Wednesday, December 5, 2012

கிருஷ்ணாஷ்டகம் 1




கண்ணா 
கார்மேக வண்ணா 
கம்சனையும் அவன் துணை சநுரணையும்
கொன்று எமைக் காத்த மன்னா,
வாசுதேவனின் வாரிசே,
தேவகிக்குக் கிட்டிய பரிசே, 
இவ்வுலகை ஆள்பவனே - பரந்தாமா 
உன் பாதம் பணிகிறேன் காத்தருள்வாய்.

மலர்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ளும்
மாதவா,
மாலை பல அணிந்த மாயவா,
கொலுசு அணிந்து எம்மனங்களைக் கொள்ளை கொண்ட கோவிந்தா,
கையில் ஆபரணம் பல அணிந்தக் கேசவா,
இவ்வுலகை ஆள்பவனே - பரந்தாமா 
உன் பாதம் பணிகிறேன் காத்தருள்வாய்.

கருத்த சுருட்டை முடி
முழுமதி போன்றுன் முகம்
காதுகளில் பளபளக்கும் குண்டலங்கள் 
ஒ ! பரந்தாமா !!
இவ்வுலகை ஆள்பவனே 
உன் பாதம் பணிகிறேன் காத்தருள்வாய்.

                                                                ( தொடரும் )